Friday, July 1, 2011

உறவுகளின் பிரிவு

4th July 2011

அன்புள்ள கிரிஜா

2007 நவம்பர் 25ம் தேதி. கடவுள் உன்னை தன்னிடம் கூப்பிட்டுகொண்டாரே, அந்த நாளிற்கு பிறகு அவர் நம்முடைய இன்னும் சில சொந்தங்களை அழைத்து கொண்டுவிட்டார்

முதலில், 2008 ஏப்ரல் 25ம்தேதி, மகேஷின் அப்பா. 23ம் தேதி Heart Attack வந்தது. உடம்பு தேறி வரும் சமயம்,25ம் தேதி 2nd Attack வந்து,அவர் எங்களை விட்டு பிரிந்தார்.

பிறகு, அதே வருடம் நவம்பர் 20ம் தேதி நம் KVS அத்திம்பேர் திடீரென உயிர் நீத்தார். 18ம் தேதி நான் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். நிறைய விஷயங்களை பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். என்ன செய்வது? 20ம் தேதி காலை உடம்பு முடியவில்லை.1 மணி நேரத்திற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

2009 ஆகஸ்டு 1ம் தேதி நம் பெரிய மன்னி டில்லியில் காலமானார். அதற்கு முன் சுமார் 15 நாட்கள் உடம்பு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்தார்.சிகிச்சை பலனளிக்காமல்,அவர் உயிர் பிரிந்தது.

எல்லோருடைய ஈம சடங்குகளில் கலந்து கொண்டு குடும்பத்தினர் எல்லோருக்கும் என்னால் ஆன ஆறுதல்களை கூறி வந்தேன்.என்னால் வேறு என்ன செய்யமுடியும் , சொல்லு கிரிஜா.

இவர்களை தவிர இன்னும் சில உறவினர்களும் இந்த 4 வருடங்களில் மறைந்தனர்.

அங்கு நீ இவர்களை சந்தித்து,உரையாடி வருவாய் என நினைக்கிறேன்.எல்லோரையும் விஜாரித்ததாக சொல்.

அடுத்த கடிதத்தில் மீண்டும் சந்திப்போம்

உன் சுகவனம்

No comments:

Post a Comment