Friday, July 1, 2011

கிரிஜா, உன்னுடன் தொடர்பு கொள்ள ஒரு புது வழி



1 ஜூலை 2011

அன்புள்ளா கிரிஜா

நீ என்னை விட்டு பிரிந்த நாள் முதல், உன்னோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய தருணங்கள் நிறைய ஏற்பட்டுவிட்டன.ஆனால், நான் எப்பொதும் கற்பனையில் தான் உன்னோடு பேச முடிந்தது.இப்போது ஒரு யோசனை, நான் நினைப்பதை ப்ளாக் ல்,எழுதி வைத்தால் என்ன என்று .

நான் எப்போது எல்லாம் உன்னோடு பேச வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போது எல்லாம், இந்த ப்ளாக் மூலமாக உன்னோடு பேசுவேன். உனக்கு, இந்த விஷயங்கள் தெரிய வரும் என நம்புகிறேன்

இந்த ப்ளாக், நீ எங்களை விட்டு பிரிந்த பின் நம் குடும்பத்தில் நடந்த முக்கிய விஷயங்களை வரலாறாக பதிவு செய்யவும், நம் பேரன், பேத்தி மற்றும் அவர்கள் சந்ததியருக்கு ஒரு விஷய பொக்கிஷமாக இருக்கவும் உதவியாக இருக்கும்.

அவ்வப்போது உனக்கு இதன் மூலமாக லெட்டர் எழுதுகிறேன். காத்திருக்கவும்.

இப்படிக்கு உன் பிரியமுள்ள

சுகவனம்

No comments:

Post a Comment