Sunday, April 29, 2012


தர்ஷிணியின் ஆயுஷ்யஹோமம், 2011 மார்ச் 24ம் தேதி, அடையார்,சாஸ்திரி நகர்,Welfare Association, Community Hall ல் விமர்சியாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்டு, குழந்தையை ஆசீர்வதித்தனர்.

குழந்தைக்கு, நாம் செய்யவேண்டிய சீர்களை செய்தேன். உன்னுடைய நெக்லஸ் ஒன்று, வளையல் 2, தோடு, வெள்ளிதட்டு, வெள்ளி டம்ளர், பட்டு பாவாடை, ஃப்ராக், மாலை ஆகியன,தர்ஷிணிக்கு நம் சீர். சுதாவிற்கு புடவை, சந்தருக்கு வேஷ்டி,அங்கவஸ்திரம், ஷர்ட் வாங்கினேன்.

முறுக்கு 31, லட்டு 31, பருப்பு தேங்காய்(மைசூர் பாக்), காப்பரிசி, திரட்டிப்பால் முதலிய பட்சணங்களும் சீராக செய்தேன்.

குழந்தை பிறந்து 1 வருடம் ஓடிவிட்டது !

தர்ஷிணிக்கு,மகிழ்ச்சியான, ஆரோக்யமான நீண்ட ஆயுளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மஹதியின் ஆயுஷ்யஹோமம்



மஹதியின் ஆயுஷ்யஹோமம், 2010 ஜூன் 24ம் தேதி அடையார் ராகா ஹாலில் விமர்சியாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்டு, குழந்தையை ஆசீர்வதித்தனர்.

குழந்தைக்கு, நாம் செய்யவேண்டிய சீர்களை செய்தேன். உன்னுடைய நெக்லஸ் ஒன்று, வளையல் 2, தோடு, வெள்ளிதட்டு, வெள்ளி டம்ளர், பட்டு பாவாடை, ஃப்ராக், மாலை ஆகியன,மஹதிக்கு நம் சீர். சுபாவிற்கு புடவை, மகேஷிற்கு, வேஷ்டி,அங்கவஸ்திரம், ஷர்ட் வாங்கினேன்.

முறுக்கு 31, லட்டு 31, பருப்பு தேங்காய்(மைசூர் பாக்), காப்பரிசி, திரட்டிப்பால் முதலிய பட்சணங்களும் சீராக செய்தேன்.

குழந்தை பிறந்து 1 வருடம் ஓடிவிட்டது !

மஹதிக்கு,மகிழ்ச்சியான, ஆரோக்யமான நீண்ட ஆயுளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Friday, April 20, 2012

தர்ஷிணி பிறந்தாள்



நான் Bypass Operation முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்த சமயம், 2009 ஆகஸ்ட் 12ம் தேதி இன்னொரு மகிழ்ச்சியான விஷயத்தை சுதா எனக்கு சொன்னாள்.ஆம், அவள் இரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறாள் என்ற விஷயம் தான் அது. 7 வருடங்களுக்கு பிறகு,தனுஷுற்கு தம்பியோ, தங்கையோ பிறக்கப் போகிறான்/ள் என்று தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நீ இருந்திருந்தால், இன்னமும் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும் ? எனது சந்தோஷத்தின் நடுவே கவலையும் வந்தது. அவளை எப்படி பார்த்துக்கொள்ள போகிறேன்,அவள் ப்ரசவம் நல்ல முறையில் நடந்து அவளையும், குழந்தையையும் நல்லபடியாக சந்தரிடம் ஒப்படைக்கவேண்டுமே , என்று.

நீ என்னுடன் இல்லாத குறை அன்று மீண்டும் ஒருமுறை பூதாகாரமாக தெரிந்தது. இருந்தாலும், நீ அவளை நல்ல முறையில் பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையும் இருந்தது. உன் இடத்தில் சுபா இருந்து கொண்டு,எனக்கு தைரியம் சொன்னாள். நான் இருக்கிறேன், கவலைபடாதே அப்பா என்று.அதே மாதிரி சுதாவை, ஒரு தாய் மாதிரி பார்த்துக்கொண்டாள்,ப்ரசவத்தின் போதும், பின்னாலும்.

நீ இல்லாத குறை சுதாவிற்கும் நிறைய இருந்திருக்கும்.ஆனால். அவளும்,அதை வெளியில் காட்டி கொள்ளாமல்,தைரியமாக இருந்தாள்.பிப் 18, 2010 வரை அவள், அவள் வீட்டிலேயே இருந்து கொண்டு வீட்டு வேலைகளையும், தன் உடம்பையும் பார்த்துக்கொண்டாள். பிப் 18 அன்று, நான் அவளை நம் வீட்டிற்கு அழைத்து வந்தேன். மாதத்திற்கு ஒரு முறை checkup சென்று வந்து, எல்லாம் நார்மலாக இருப்பதை உறுதி செய்துகொண்டோம்.டாக்டர், அதே சரோஜா ராமனாதன் தான் ( ஆனால், ப்ரசவத்தன்று, டாக்டர் ஒரு அவசர வேலையாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், ப்ரசவத்தை, அவருக்கு தெரிந்த வேறொரு டாக்டர் பார்த்தார். )

மார்ச் கடைசியில் checkupக்கு சென்றபோது, குழந்தை முழு வளர்ச்சி அடைந்துவிட்டது, இனிமேல் காத்திருக்கவேண்டாம்,சிசேரியன் தான் செய்யவேண்டும், ஒரு நல்ல நாள் பார்த்து Hospital க்கு வந்துவிடு என டாக்டர் கூறினார். அதன்படி, ஏப் 3ம் தேதி நல்ல நாளாக இருந்ததால், சுதாவை 2ம் தேதி இரவு Isabel Hospital ல் அட்மிட் செய்தோம். 3ம் தேதி காலை 7 மணி சுமாருக்கு, சுதா ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாயானாள்.

2வது பேத்தி பிறந்த சந்தோஷமும்,அவளை பார்க்க நீ இல்லையே என்ற வருத்தமும் ஒரு சேர வந்து,அழுதேன். எல்லோரும், நீயே வந்து பிறந்திருக்கிறாய் என்று மறுபடியும் சொன்னார்கள் ( மஹதி பிறந்தபோதும் சோன்னார்கள்). எப்படியா கிரிஜா, குழந்தை பார்க்க அழகாக இருந்தாள், உன்னைப்போலவே.

5ம் நாள் சுதா, குழந்தை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார்கள். டாக்டரின் advice படி, குழந்தை பிறந்து 27 ம் நாள் தான் (30 4 10 ) புண்யாகவாசனம் செய்தோம்.As usual, நம் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது.வழக்கம் போலவே, நம் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்திருந்து சுதா,சந்தர்,குழந்தையை ஆசிர்வாதம் செய்தார்கள்.குழந்தைக்கு, தர்ஷிணி என்று பெயர் வைத்திருக்கிறோம்.குழந்தைக்கு நாய் காசு, தாயத்து செய்து போட்டேன்.குழந்தையை கொண்டு விடும் போது Gold Chain வாங்கி போட்டேன்.

ப்ரசவத்திற்கு உதவிக்காக, சுபா ப்ரசவத்திற்கு, 3 நாட்கள் முன் வந்திருந்து, சுதாவை பார்த்துகொண்டாள்.சாவித்திரியும், ரமாவும் வந்திருந்து சுதாவையும், குழந்தையையும்,வீட்டையும் 10/15 நாட்கள் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி.

குழந்தை பிறந்து சுமார் 5 மாதங்கள் என்னுடன் இருந்தாள். ஆடி மாதம், அவளையும், குழந்தையையும், அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டேன். சுபா மே கடைசியில் பூனா திரும்பிய பிறகு,நானும் சுதாவுமே குழந்தையை பார்த்துக்கொண்டுவிட்டோம்.

கடவுள் கிருபையாலும் உன் ஆசியாலும், மீண்டும் ஒரு முக்கிய கடமை நல்லவிதமாக முடிந்தது. நன்றி.

மறுபடியும் சந்திப்போம்,

உன் அன்புள்ள

சுகவனம்


Thursday, January 19, 2012

இருதய ஆபரேஷன்

20 ஜனவரி 2012

அன்புள்ள கிரிஜா,

2008 அக்டோபரில், எனக்கு இருதய வலி வர ஆரம்பித்தது. சுமார் 15 நிமிடம் நடந்தால்,வலி வரும். பின் நின்று 1 நிமிடம் rest எடுத்து கொண்டால் normal ஆகி விடும். நடக்கும் போது தான் இந்த problem இருந்தது. மற்றபடி சாதாரணமாகத்தான் இருந்தேன். சுபா அப்போது pregnant ஆக இருந்ததால், அவள் ப்ரசவத்திற்கு பிறகு பார்த்துக்கலாம் என்று இருந்து விட்டேன்.

நாளாக நாளாக, 15 நிமிடத்திற்கு ஒரு முறை என்று வந்த வலி, 10 நிமிடம், 5 நிமிடத்திற்கு ஒரு முறை வர ஆரம்பித்தது. 2009 ஏப்ரலில் ( அப்போது நான் பூனாவில் இருந்தேன் ) வலி அதிகமாகவே, சுபா, மகேஷிடம் எனது வலியைப்பற்றி கூறினேன். அவர்கள் உடனே பூனாவின் பிரபல இருதய டாக்டரிடம் கூட்டி சென்றார்கள். அவர், ECG, treadmill test செய்து பார்த்து விட்டு, ”எல்லாம் normal ஆக இருக்கிறது, நீங்கள் ஒரு மாதம் நான் கொடுக்கும் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் checkup ற்கு வாருங்கள்” என்று கூறிவிட்டார். அவர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டபிறகு சில நாட்களுக்கு வலி குறைந்தது. பிறகு மீண்டும் பழையபடி வலி வந்தது.

சென்னைக்கு திரும்பும் முன் , மே மாத கடைசியில் ,அந்த Doctor ஐ மறுபடியும் போய் பார்த்தேன். Check செய்து விட்டு, ”problem ஏதும் இல்லை, கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு வாருங்கள், 6 மாதத்திற்கு பிறகு check up க்கிற்கு வாருங்கள், அதற்கு முன்னரே வலி அதிகமானால், சென்னையில் Doctor ரிடம் காட்டுங்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

சென்னை வந்த பிறகும், வலி குறைவதாக தெரியவில்லை. சுபா ப்ரசவத்திற்காக wait பண்ணினேன்,கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு.சுபாவிற்கு குழந்தை பிறந்து, நல்லபடியாக புண்யாகவாசனமும் நடந்து முடிந்த பிறகு,ஜூலை கடைசியில், Malar Hospitalல்,Dr.ரவிக்குமார் என்ற Cardiologist ஐ போய் பார்த்தேன். அவர், "Angiogram" செய்து பார்த்துவிடலாம் என கூறினார். Insurance formalities முடித்த பிறகு Angiogram செய்ய இருந்தார். அப்போது டில்லியில் பெரிய மன்னி காலமாகிவிட்டார்- ஆகஸ்டு 1ம் தேதி அன்று.

மறுநாள்- ஆகஸ்டு 2ம் தேதி- காலை விமானம் மூலம் நான் டில்லி கிளம்பி விட்டேன்.ராஜப்பா, மன்னி கூட வந்தார்கள்.விமானத்தில் போகும் போது, நல்ல வலி வந்து விட்டது. என்னசெய்வது என தெரியவில்லை. ராமஜெயம் சொல்லிக்கொண்டு இருந்தேன். நல்லவேளையாக, சிறிது நேரத்தில்,வலி போய் விட்டது. டில்லி சென்றவுடன் Chest Pain வந்தால் சாப்பிடவேண்டிய மாத்திரையை வாங்கி சாப்பிட்டேன்.

மன்னி காரியங்கள் முடிந்த கையோடு, ஆக 4ம் தேதி செவ்வாய் விமானம் மூலம் சென்னை திரும்பிவிட்டேன். 5ம்தேதி Malar Hospital சென்று, Dr ஐ பார்த்தேன். Insurance Co approval க்கான papers களை கொடுத்தேன். அன்று பிற்பகலே approval வந்து விட்டது. ஆகவே Dr என்னை மறுநாள்- 6ம் தேதி காலை 8 மணிக்கு Hospital வர சொல்லிவிட்டார்.

ஆக 6ம் தேதி , வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, Hospital சென்றேன்.காலை 9 மணிக்கு Dr ரவிக்குமார் "Angiogram" test எடுத்தார். அங்கேயே Screenல் எனது இருதயத்தில் இருந்த 3 blocks ஐ காண்பித்தார். ஆமாம், 3 blocks இருந்தன ! என்னாலேயே நம்ப முடியவில்லை !!

காலை 11 மணிக்கு, இருதய ஆபரேஷன் செய்யும் Dr K R பாலகிருஷ்ணன் என்னை கூப்பிட்டு, இதயத்தில் இருந்த blocks ஐ பற்றி கூறி விட்டு, 3 அடைப்புகள் இருப்பதால், Bypass Surgery ( CABG -Coronary Artery Bypass Graft ) தான் செய்ய வேண்டும், Angioplasty செய்யமுடியாது, என்று கூறி, Bypass Surgeryக்கு, என் சம்மதம் கேட்டார். என்க்கு என்ன Option இருந்தது ? Operation க்கு OK சொல்லிவிட்டேன். சரி, 9ம் தேதி திங்கள், CABG ஐ வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். நான், “ஏன் 9ம் தேதி , இன்றே பண்ணிவிடுங்களேன்” என்று கூறினேன். அதற்கு Dr சிரித்து விட்டு ”சில prelimnary tests செய்யவேண்டும்,அதனால் இன்று செய்யமுடியாது” என கூறினார். பிறகு, அவர் Asst இடம், மறுநாள் , Slot இருக்கிறதா என கேட்டார். ( அவர் ஒரு நாளைக்கு 4 or 5 Operations செய்வார்.மறுநாள், எத்தனை Operations இருக்கின்றன, இன்னும் ஒரு Operation ஐ வைத்துக்கொள்ளலாமா என்பதைத் தான் அப்படி கேட்டார்.). மறுநாள், 2PM slot vacant ஆக இருக்கிறது என அவர் Asst கூறியவுடன், எனது Operation ஐ அந்த நேரத்திற்கு allot செய்துவிட்டார், Dr பாலகிருஷ்ணன்.

அன்று மாலையிலிருந்து எல்லா டெஸ்டுகளும் ஆரம்பித்தன. Complete Blood test, urine test, ECG, X Ray, Echo Cardiogram, Dopplers Test, Blood Clotting time test, BP, Pulse Rate என ஏகப்பட்ட டெஸ்ட்.

மறுநாள்- ஆக 7ம் தேதி-வெள்ளிக்கிழமை-- காலையில் எல்லாம் normal என result வந்த பிறகு, Operation ஐ நிச்சயம் செய்தார்கள். காலை 7 மணிக்குள் காலை டிபனை முடித்துக்கொள்ள சொன்னார்கள். இட்லி சாப்பிட்டேன்.பிறகு, என் மார்பு, வயிறு, இரண்டு கைகள்,இரண்டு கால்கள், முதுகு என எல்லா இடங்களிலும் ஷேவ் செய்தார்கள். ( Operation செய்யவும், Tubes சொருகவும், stitches போடவும் easy ஆக இருக்கும்பொருட்டு. )

சுதா family, சுபா family, சரோஜா,ரமணா, உமா , கீர்த்தனா,எனது நண்பர்கள், ரங்கராஜன், பாலதண்டாயுதம் என நிறைய பேருடன் அரட்டை அடித்துக்கொண்டு 1 மணி வரை பொழுதுபோக்கினேன்.

1.15க்கு என்னை Operation Theatreக்கு கூட்டிப்போனார்கள். அங்கு போனவுடன், Operation Table ல் படுக்கவைத்து, என் பெயர், என்ன problem, எங்கு operation என கேள்விகளை கேட்டார்கள். ( ஜீன்ஸ் படம் ஞாபகம் வந்தது )- just to make sure that they will be doing the Bypass surgery ( CABG ) on the correct person. பின் anesthesia கொடுத்தார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. இடது காலிலிருந்து சுமார் 2 1/2 அடி நீள ரத்தகுழாயை கட் பண்ணி, இருதயத்தில் நாலு இடங்களில் Bypass வழிகளை ஏற்படுத்தி,Operation ஐ வெற்றிகரமாக 5 மணி சுமாருக்கு முடித்தார்கள் என பிற்பாடு தெரிந்துகொண்டேன். மாலை 7 மணிக்கு என்னை ICU க்கு மாற்றினார்கள்.

8,9,10 மூன்று நாட்கள் ICU ல் இருந்தேன். 11ம் தேதி ரூமிற்கு மாற்றி, 15ம் தேதி Discharge செய்தார்கள். ஆபரேஷனுக்கு பிறகு நான் பட்ட அவஸ்தைகளை பற்றி தெரிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்து படித்துக்கொள். ஆபரேஷன் முடிந்து, சுபாவும் ஊருக்கு சென்ற பின், நான் சுமார் 2 1/2 மாதங்கள் சுதா வீட்டில் தங்கி ரெஸ்டில் இருந்தேன். இந்த சமயத்தில்,சுதாவும், சந்தரும்,என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டதை நன்றியோடு, நினைத்துப் பார்க்கிறேன்.

இப்படியாக எனது CABG Surgery நல்லவிதமாக முடிந்தது. Operation முடிந்து 2 1/2 வருடங்கள் ஆகி விட்டன. உடம்பு தற்போது நார்மலாக உள்ளது. கடவுளுக்கு நன்றி.

மீண்டும் சந்திப்போம்

உன் சுகவனம்

Saturday, August 13, 2011

மஹதி பிறந்தாள்

13 Aug 2011

அன்புள்ள கிரிஜா,

2008 அக்டோபர் மாதத்தில், ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.சுபா இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகிறாள் என்பதே அது.நீ இருந்திருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாய் ? எனது சந்தோஷத்தின் நடுவே கவலையும் வந்தது. அவளை எப்படி பார்த்துக்கொள்ள போகிறேன்,அவள் ப்ரசவம் நல்ல முறையில் நடந்து அவளையும், குழந்தையையும் நல்லபடியாக மகேஷிடம் ஒப்படைக்கவேண்டுமே , என்று.

நீ என்னுடன் இல்லாத குறை அன்று மீண்டும் பூதாகாரமாக தெரிந்தது. இருந்தாலும், நீ அவளை நல்ல முறையில் பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையும் இருந்தது. உன் இடத்தில் சுதா இருந்து கொண்டு,எனக்கு தைரியம் சொன்னாள். நான் இருக்கிறேன், கவலைபடாதே அப்பா என்று.அதே மாதிரி சுபாவை, ஒரு தாய் மாதிரி பார்த்துக்கொண்டாள்,ப்ரசவத்திற்கு முன்னாலும்,பின்னாலும்.

நீ இல்லாத குறை சுபாவிற்கும் நிறைய இருந்திருக்கும்.ஆனால். அவளும்,அதை வெளியில் காட்டி கொள்ளாமல்,தைரியமாக இருந்தாள்.

2009 மே வரை பூனாவிலேயே இருந்தாள். நானும் அவளுடன் இருந்து, என்னாலான சிறு உதவிகளை செய்து தந்தேன்.2009 ஜூன் மாதம், சென்னைக்கு வந்தாள். சுதாவிற்கு ப்ரசவம் பார்த்த டாக்டர் சரோஜா ராமனாதன் தான், சுபாவிற்கும் பார்த்தாள். சென்னை வந்ததும் செக் அப் செய்து, எல்லாம் நார்மலாக இருப்பதாக கூறினார்.ஜூலை 10ம் தேதிக்குள் குழந்தை பிறக்கும் என்றும் சொன்னார்.

ஜூன் கடைசியில், செக் அப் செய்துவிட்டு, குழந்தை பூரண வளர்ச்சி பெற்றுவிட்டது, ஆனால்,சிசேரியன் தான் செய்ய வேண்டும், எனவே ஒரு நல்ல நாள் பார்த்து, hospital ல் அட்மிட் ஆகி விடும்படி கூறினார். அதன்படி, ஜூலை 4ம் தேதி-சனிக்கிழமை- நல்ல நாளாக இருந்ததால், அன்று காலை நான், சுதா, மகேஷ், சந்தர் அவளை கூட்டிசென்று, மைலாப்பூர் இசபல் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தோம். பிற்பகல் 1250 க்கு அவளுக்கு, சுக ப்ரசவம் ஆகி, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

பேத்தி பிறந்த சந்தோஷமும்,அவளை பார்க்க நீ இல்லையே என்ற வருத்தமும் ஒரு சேர வந்து,அழுதேன். எல்லோரும், நீயே வந்து பிறந்திருக்கிறாய் என்று சொன்னார்கள். அப்படியா கிரிஜா ? குழந்தை பார்க்க அழகாக இருந்தாள்.

5ம் நாள் சுபா, குழந்தை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார்கள். 11ம் நாள் புண்யாகவாசனம் நம் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது.வழக்கம் போலவே, நம் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்திருந்து சுபா , குழந்தையை ஆசிர்வாதம் செய்தார்கள்.

குழந்தைக்கு, சீதாலஷ்மி, மஹதி என்று பெயர் வைத்து இருக்கிறோம். குழந்தைக்கு நாய் காசு, தாயத்து செய்து போட்டேன்.குழந்தையை கொண்டு விடும் போது Gold Chain வாங்கி போட்டேன்.கடவுள் அருளால், குழந்தை எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்.

ஆகஸ்டு மாத கடைசியில் சுபா குழந்தையை, மகேஷின் அண்ணா குமார் வீட்டில் சுதா சந்தர் கொண்டு விட்டனர். ( எனக்கு ஆபரேஷன் நடந்து இருந்ததால், நான் போக முடியவில்லை ).

ப்ரசவத்திற்கு உதவிக்காக, ரமணாவும், சாவித்திரியும் வந்திருந்து சுதாவிற்கு துணையாக இருந்து சுபாவையும், குழந்தையையும்,வீட்டையும் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி.

கடவுள் கிருபையாலும் உன் ஆசியாலும், ஒரு முக்கிய கடமை நல்லவிதமாக முடிந்தது.
நன்றி.

மீண்டும் சந்திப்போம்,

உன் அன்புள்ள

சுகவனம்

Tuesday, July 5, 2011

ஆப்தீக காரியங்கள் -டிச10-டிச14,2008

13 ஆகஸ்டு 11

அன்புள்ள கிரிஜா,

நீ கடவுளிடம் சென்று ஒரு வருடம் ஆன பிறகு உன் ஆத்மாவிற்கு செய்யவேண்டிய ஆப்தீக காரியங்களை 2008 டிசம்பர் 10,12,13,14 தேதிகளில் சிரத்தையாக செய்தேன்.

டிச 10ம் தேதி, ஊன மாஸிகம்- சுதா fly, சுபா fly, சாவித்ரி கலந்து கொண்டார்கள்.1015மணிக்கு ஆரம்பித்து 1115 க்கு முடிந்தது.

டிச 12ம் தேதி ஆப்தீக ஸோதகும்பம் - சுதா fly, சுபா fly, சாவித்ரி கூட , சரோஜா,ராஜப்பா, மன்னியும் கலந்து கொண்டு,சமையலிலும் உதவி செய்தார்கள். 10 மணிக்கு ஆரம்பித்து 1045 க்கு முடிந்தது. எல்லோரும் சாப்பிட்டு முடிக்க 1 மணி ஆகி விட்டது.

டிச 13ம் தேதி சிரார்தம் நல்ல முறையில் நடைபெற்று முடிந்தது. 12ம் தேதி கலந்து கொண்டவர்களே இன்றும் இருந்தார்கள்.1045 க்கு ஆரம்பித்து, 1145 க்கு முடிந்தது. உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை ப்ராத்திக்கிறேன்.

இந்த 3 நாட்களும் ஹோமம் இல்லாததால், தினமும் கிட்டதட்ட 1 மணி நேரத்தில் காரியங்கள் முடிந்து விட்டன.

டிச 14ம் தேதி கிரேக்கியம்.நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். நவக்கிரஹ ஹோமமும், பூஜையும் செய்தோம். 10 மணிக்கு ஆரம்பித்து, 1145 க்கு முடிந்தது.

இந்த 4 நாட்களும், சமையலில் உதவி செய்த சரோஜா, சாவித்ரி, விஜயா மன்னிக்கு நன்றிகள் பல. சுதா , சுபா எல்லா வேலைகளையும் , மிக சிரத்தையாக செய்தார்கள். அவர்களுக்கு,உன் ஸ்பெஷல் ஆசிர்வாதங்கள் கிடைத்திருக்கும்.

மீண்டும் சந்திப்போம்....

உன் சுகவனம்

Friday, July 1, 2011

உறவுகளின் பிரிவு

4th July 2011

அன்புள்ள கிரிஜா

2007 நவம்பர் 25ம் தேதி. கடவுள் உன்னை தன்னிடம் கூப்பிட்டுகொண்டாரே, அந்த நாளிற்கு பிறகு அவர் நம்முடைய இன்னும் சில சொந்தங்களை அழைத்து கொண்டுவிட்டார்

முதலில், 2008 ஏப்ரல் 25ம்தேதி, மகேஷின் அப்பா. 23ம் தேதி Heart Attack வந்தது. உடம்பு தேறி வரும் சமயம்,25ம் தேதி 2nd Attack வந்து,அவர் எங்களை விட்டு பிரிந்தார்.

பிறகு, அதே வருடம் நவம்பர் 20ம் தேதி நம் KVS அத்திம்பேர் திடீரென உயிர் நீத்தார். 18ம் தேதி நான் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். நிறைய விஷயங்களை பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். என்ன செய்வது? 20ம் தேதி காலை உடம்பு முடியவில்லை.1 மணி நேரத்திற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

2009 ஆகஸ்டு 1ம் தேதி நம் பெரிய மன்னி டில்லியில் காலமானார். அதற்கு முன் சுமார் 15 நாட்கள் உடம்பு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்தார்.சிகிச்சை பலனளிக்காமல்,அவர் உயிர் பிரிந்தது.

எல்லோருடைய ஈம சடங்குகளில் கலந்து கொண்டு குடும்பத்தினர் எல்லோருக்கும் என்னால் ஆன ஆறுதல்களை கூறி வந்தேன்.என்னால் வேறு என்ன செய்யமுடியும் , சொல்லு கிரிஜா.

இவர்களை தவிர இன்னும் சில உறவினர்களும் இந்த 4 வருடங்களில் மறைந்தனர்.

அங்கு நீ இவர்களை சந்தித்து,உரையாடி வருவாய் என நினைக்கிறேன்.எல்லோரையும் விஜாரித்ததாக சொல்.

அடுத்த கடிதத்தில் மீண்டும் சந்திப்போம்

உன் சுகவனம்

கிரிஜா, உன்னுடன் தொடர்பு கொள்ள ஒரு புது வழி



1 ஜூலை 2011

அன்புள்ளா கிரிஜா

நீ என்னை விட்டு பிரிந்த நாள் முதல், உன்னோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய தருணங்கள் நிறைய ஏற்பட்டுவிட்டன.ஆனால், நான் எப்பொதும் கற்பனையில் தான் உன்னோடு பேச முடிந்தது.இப்போது ஒரு யோசனை, நான் நினைப்பதை ப்ளாக் ல்,எழுதி வைத்தால் என்ன என்று .

நான் எப்போது எல்லாம் உன்னோடு பேச வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போது எல்லாம், இந்த ப்ளாக் மூலமாக உன்னோடு பேசுவேன். உனக்கு, இந்த விஷயங்கள் தெரிய வரும் என நம்புகிறேன்

இந்த ப்ளாக், நீ எங்களை விட்டு பிரிந்த பின் நம் குடும்பத்தில் நடந்த முக்கிய விஷயங்களை வரலாறாக பதிவு செய்யவும், நம் பேரன், பேத்தி மற்றும் அவர்கள் சந்ததியருக்கு ஒரு விஷய பொக்கிஷமாக இருக்கவும் உதவியாக இருக்கும்.

அவ்வப்போது உனக்கு இதன் மூலமாக லெட்டர் எழுதுகிறேன். காத்திருக்கவும்.

இப்படிக்கு உன் பிரியமுள்ள

சுகவனம்