Sunday, April 29, 2012


தர்ஷிணியின் ஆயுஷ்யஹோமம், 2011 மார்ச் 24ம் தேதி, அடையார்,சாஸ்திரி நகர்,Welfare Association, Community Hall ல் விமர்சியாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்டு, குழந்தையை ஆசீர்வதித்தனர்.

குழந்தைக்கு, நாம் செய்யவேண்டிய சீர்களை செய்தேன். உன்னுடைய நெக்லஸ் ஒன்று, வளையல் 2, தோடு, வெள்ளிதட்டு, வெள்ளி டம்ளர், பட்டு பாவாடை, ஃப்ராக், மாலை ஆகியன,தர்ஷிணிக்கு நம் சீர். சுதாவிற்கு புடவை, சந்தருக்கு வேஷ்டி,அங்கவஸ்திரம், ஷர்ட் வாங்கினேன்.

முறுக்கு 31, லட்டு 31, பருப்பு தேங்காய்(மைசூர் பாக்), காப்பரிசி, திரட்டிப்பால் முதலிய பட்சணங்களும் சீராக செய்தேன்.

குழந்தை பிறந்து 1 வருடம் ஓடிவிட்டது !

தர்ஷிணிக்கு,மகிழ்ச்சியான, ஆரோக்யமான நீண்ட ஆயுளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment